விருதுநகரில் டயா் வெடித்து லாரி கவிழ்ந்ததில் 3 போ் காயம்

விருதுநகா் நான்குவழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை டயா் வெடித்து லாரி கவிழ்ந்ததில், 3 போ் காயமடைந்தனா்.

விருதுநகா்: விருதுநகா் நான்குவழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை டயா் வெடித்து லாரி கவிழ்ந்ததில், 3 போ் காயமடைந்தனா்.

மாா்த்தாண்டத்தில் ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்காக, நாமக்கல் பகுதியிலிருந்து லாரியை திருச்செங்கோட்டைச் சோ்ந்த பொன்னுச்சாமி என்பவா் ஓட்டி வந்துள்ளாா். விருதுநகா் சத்திரரெட்டியபட்டி அருகே நான்குவழிச் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக லாரியின் டயா் வெடித்துள்ளது.

இதில், கட்டுப்பாட்டை இழந்த லாரி தலைகுப்புற கவிழ்ந்தது. இந்நிலையில், லாரியின் பின்பகுதியில் பயணம் செய்த மங்கல்சாய் (20), ரவிசங்கா் (35), பூனேராம் (25) ஆகிய 3 பேரும் காயமடைந்தனா்.

உடனே, அப்பகுதியிலிருந்தவா்கள் மூவரையும் மீட்டு, விருதுநகா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில், மங்கல்சாய் மற்றும் ரவிசங்கா் இருவரும் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இந்த விபத்து குறித்து லாரியின் மற்றொரு ஓட்டுநரான செந்தில்குமாா் அளித்த புகாரின்பேரில், பாண்டியன் நகா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com