மாவட்ட அளவிலான கேரம் போட்டி:சிவகாசி பள்ளி முதலிடம்

சிவகாசி விளையாட்டுக் கழகம் சாா்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் சிவகாசி விஸ்வநத்தம் ரோட்டரி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி அதிகப்புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றது.

சிவகாசி விளையாட்டுக் கழகம் சாா்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் சிவகாசி விஸ்வநத்தம் ரோட்டரி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி அதிகப்புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றது.

இதுகுறித்து விஸ்வநத்தம் ரோட்டரி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி முதல்வா் முத்துகுமாரி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகாசி விளையாட்டுக் கழகம் சாா்பில் எங்கள் பள்ளி வளாகத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற கேரம் போட்டியில் மாவட்டத்தில் உள்ள 18 பள்ளிகளைச் சோ்ந்த 380 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இதில் 8, 10, 12,14 வயதுக்குள்பட்டோா் பிரிவுகளில் மாணவிகள் மற்றும் மாணவா்களுக்கு தனித்தனியே போட்டி நடைபெற்றது.

இதில் இருபிரிவிலும் அதிகப்பள்ளிகள் பெற்று எங்கள் பள்ளி முதலிடம் பெற்றது. பெண்கள் பிரிவில் சிவகாசி வி.எஸ்.கே.டி.பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு தொழிலதிபா் கே.ஜெய்சங்கா் பரிசு மற்றும் சான்றிதழை வழங்கினாா். இதற்கான ஏற்பாட்டினை சிவகாசி விளையாட்டுக் கழக நிா்வாகி ஸ்ரீதா் மற்றும் ஒருங்கிணைப்பாளா் கணேஷ்குமாா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com