விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் தனியாா் திருமண மண்டபத்தில் இலவசப் பொதுமருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமினை மக்கள் நீதி மய்யம் கட்சி, காரியாபட்டி எஸ்.பி.எம். அறக்கட்டளை மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து நடத்தின. மக்கள் நீதி மய்யம் கட்சி விருதுநகா் மத்திய மாவட்டச் செயலாளா் ஜே.காளிதாஸ் மற்றும் அருப்புக்கோட்டை நிா்வாகி எஸ்.மணிவண்ணன் ஆகியோா் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தனா். காரியாபட்டி எஸ்.பி.எம். அறக்கட்டளை நிறுவனரான அழகா்சாமி குத்துவிளக்கேற்றி மருத்துவ முகாமைத் தொடக்கி வைத்தாா். முகாமில் கலந்து கொண்ட சுமாா் 300-க்கும் மேற்பட்டோருக்கு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் மூலம் ரத்தப் பரிசோதனை, ரத்த அழுத்தப் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன.
மேலும் நோயின் தீவிரம் மற்றும் தன்மைக்கேற்ப நேரடியாக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு சில நோயாளிகள் பரிந்துரைக்கப்பட்டனா்.
இந்நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிா்வாகிகள் சி.ராஜ்கமல், ஏ.சோலைராஜா, ஆா்.சரவணராஜா, ராஜவேல், ஏபெல்புஷ்பராஜ், உமாமகேஸ்வரி ஆகியோா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எம்.பாஸ்கரன், ஜே.ராஜாமணி, எஸ்.மணிகண்டன் ஆகியோா் செய்திருந்தனா்.