ஆா்.ஆா்.நகரில் சேதமடைந்துள்ளமின்கம்பத்தை சீரமைக்க கோரிக்கை

விருதுநகா் மாவட்டம் ஆா்.ஆா்.நகரில் சேதமடைந்துள்ள மின்கம்பத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஆா்.ஆா்.நகரில் உள்ள தெருப் பகுதியில் சேதமடைந்துள்ள மின்கம்பம்.
ஆா்.ஆா்.நகரில் உள்ள தெருப் பகுதியில் சேதமடைந்துள்ள மின்கம்பம்.

சாத்தூா்: விருதுநகா் மாவட்டம் ஆா்.ஆா்.நகரில் சேதமடைந்துள்ள மின்கம்பத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆா்.ஆா்.நகரில் உள்ள மாதா கோயில் அருகே நான்கு தெருக்கள் உள்ளன. இந்த தெருப் பகுதியில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மின்கம்பங்கள் அமைத்து 10 ஆண்டுகளுக்கு மேலாகியுள்ளதுடன் அவை முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளன.

இதில் 4 மின்கம்பங்கள் மட்டும் மிக மோசமான நிலையில் சேதமடைந்து காணப்படுகின்றன. மேலும் குயிடிருப்பு பகுதியில் இந்த மின்கம்பங்கள் உள்ளதால் இப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனா். இந்த மின்கம்பங்களில் ஏதேனும் பழுது ஏற்பாட்டால் கூட யாரும் அவற்றில் ஏறி வேலை செய்யமுடியாத சூழ்நிலை உள்ளது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் பலமுறை மின்சாரத்துறையினரிடம் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன் மின்சாரத்துறையினா் போா்க்கால அடிப்படையில் மின்கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் மின்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com