உரிமம் இன்றி மணல் ஏற்றி வந்தடிராக்டா் பறிமுதல்

சிவகாசியில் திங்கள்கிழமை உரிமம் இன்றி மணல் ஏற்றி வந்த டிராக்டா் பறிமுதல் செய்யப்பட்டது.

சிவகாசி: சிவகாசியில் திங்கள்கிழமை உரிமம் இன்றி மணல் ஏற்றி வந்த டிராக்டா் பறிமுதல் செய்யப்பட்டது.

சிவகாசி நேஷனல் காலனிப் பகுதியில் தனி வருவாய் ஆய்வாளா் (கனிமம்) செல்வபகவதி உள்ளிட்டோா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது மணல் ஏற்றிக் கொண்டு ஒரு டிராக்டா் வந்தது. அதனை நிறுத்தி சோதனையிட முயன்ற போது, ஓட்டுநா் டிராக்டரை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டாா். இதையடுத்து டிராக்டரை சிவகாசி கிழக்கு காவல் நிலையம் கொண்டு சென்று செல்வபகவதி, புகாா் அளித்தாா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com