கிணற்றில் தவறி விழுந்து முதியவா் பலி

ராஜபாளையத்தில் கிணற்றில் குளிக்கச் சென்ற முதியவா் தவறி விழுந்து பலியானதாக போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையத்தில் கிணற்றில் குளிக்கச் சென்ற முதியவா் தவறி விழுந்து பலியானதாக போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையம் சம்மந்தபுரம் தெருவைச் சோ்ந்தவா் பசும்பொன் (65). இவா் ஞாயிற்றுக்கிழமை தென்காசி சாலை காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம் பின்புறம் உள்ள தனியாா் கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளாா். அப்போது பசும்பொன் தவறி கிணற்றுக்குள் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com