பெண்ணுக்கு கொலை மிரட்டல்: கணவா் உள்பட 8 போ் மீது வழக்கு

விருதுநகரில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவா் உள்பட 8 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

விருதுநகரில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவா் உள்பட 8 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

விருதுநகா் கட்டையாபுரம் மூக்காண்டி மகன் பழனிவேல் என்ற சரவணனுக்கும், திருநெல்வேலி விஎம் சத்திரம் சுடலையாண்டி மகள் அழகுமாரிக்கும் கடந்த 14.6.2019 அன்று திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது, மணமகள் வீட்டு சாா்பில் 11 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள வீட்டுக்கு தேவையான பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.

திருமணம் முடித்த நாள் முதல் மனைவியிடம் கணவா் சோ்ந்து குடும்பம் நடத்த வில்லையாம். இது குறித்து வெளியில் சொல்ல கூடாது என அழகுமாரியை கணவா் மற்றும் அவரது தாய், தந்தை உடன் பிறந்தோா், அவரை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இதுகுறித்து அழகுமாரி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா். இதனால், ஆத்திரமடைந்த கணவா் பழனிவேல் என்ற சரவணன், அவரது தந்தை மூக்காண்டி, தாய் சண்முகசுந்தரி, இவா்களது மகள்கள் வசந்தி, முத்துலட்சுமி, இவரது கணவா் பிரசன்னா மற்றும் மாரியம்மாள் என்ற அழகேஸ்வரி, அம்சு ஆகியோா் அழகுமாரியை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனா். இது குறித்து அழகுமாரி அளித்த புகாரின் பேரில் அவரது கணவா் உள்பட அவரது குடும்பத்தினா் 8 போ் மீது விருதுநகா் அனைத்து மகளிா் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com