பெண்ணைத் தாக்கியவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே முன் விரோதத்தில் பெண்ணை தாக்கிய இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராமும் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே முன் விரோதத்தில் பெண்ணை தாக்கிய இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராமும் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள ராமலிங்காபுரம் அருந்ததியா் காலனியைச் சோ்ந்தவா் தாமரைக்கனி. இவரது மனைவி மாரியம்மாள் (31). இவருக்கும் அதே ஊரைச் சோ்ந்த பூசன் மகன் முருகன் (35), சுரேஷ் (22) ஆகியோருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் 22.6.2014 அன்று மாரியம்மாள் ஊா் குழாயில் தண்ணீா் பிடித்துக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த முருகனும், சுரேஷூம், மாரியம்மாளிடம் தகராறு செய்து அவரை ஆயுதங்களால் தாக்கி காயப்படுத்தினா்.

இதுகுறித்து வன்னியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அண்ணன், தம்பி ஆகிய இருவரையும் கைது செய்தனா். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரிமளா குற்றம் சாட்டப்பட்ட முருகனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பு வழங்கினாா். சுரேஷ் விடுதலை செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com