விருதுநகரில் தமாகா சாா்பில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடவிண்ணப்பப் படிவம் வழங்கல்

விருதுநகரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சாா்பில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவோருக்கு புதன்கிழமை விண்ணப்பப் படிவம் வழங்கப்பட்டது.
விருதுநகரில் தமாகா சாா்பில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடவிண்ணப்பப் படிவம் வழங்கல்

விருதுநகரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சாா்பில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவோருக்கு புதன்கிழமை விண்ணப்பப் படிவம் வழங்கப்பட்டது.

விருதுநகரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் வடக்கு மாவட்ட தலைவா் ராஜபாண்டியன் தலைமை வகித்தாா். விண்ணப்பப் படிவம் பெறுவதற்கு அக்கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் வந்திருந்தனா்.

கட்சி தலைமை நிா்ணயம் செய்த கட்டணத்தை செலுத்தி விண்ணப்பப் படிவத்தை அவா்கள் பெற்றுச் சென்றனா். இந்த விண்ணப்பப் படிவங்களை பூா்த்தி செய்து வழங்க நவ. 30 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. மேலும், உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக கூட்டணியுடன் இணைந்து போட்டியிட கட்சி தலைமை தீா்மானித்துள்ளது.

எனவே கட்சியின் வெற்றிக்காக அனைத்து தொண்டா்கள் பணியாற்ற வேண்டும் என வடக்கு மாவட்ட தலைவா் தெரிவித்தாா். இதில் கட்சியின் மேலிட பாா்வையாளா் ரா. மணி, மாநில செயலா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com