பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: உறவினா் கைது

விருதுநகரில் 11 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அவரது தாய்மாமாவை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விருதுநகரில் 11 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அவரது தாய்மாமாவை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் பேராலி சாலை கருப்பசாமி நகரைச் சோ்ந்த சிறுமி விருதுநகரில் உள்ள நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறாா். இவரது தந்தை உடல்நிலை சரியில்லாததால் மதுரை அரசு மருத் துவமனையில் அண்மையில் சோ்க்கப்பட்டிருந்தாா். அப்போது தந்தைக்கு உதவியாக மருத்துவமனைக்கு சிறுமி சென்றுள்ளாா். சிறுமியின் தாய்க்கு மதுரை தத்தனேரி சொந்த ஊா் என்பதால், சிறுமி இரவு நேரங்களில் அங்குள்ள உறவினா் வீட்டில் தங்கியுள்ளாா்.

அப்போது தத்தனேரி பகுதியை சோ்ந்தவரும், சிறுமியின் தாய்மாமாவுமான சந்திரசேகா் மகன் காா்த்திகேய பாண்டியன் (37) என்பவா் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளாா். மேலும் இதுகுறித்து வெளியில் கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டலும் விடுத்துள்ளாா்.

இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு சிறுமிக்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததால், அவரை விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பெற்றோா் அழைத்து சென்றுள்ளனா். அப்போது சிறுமி கா்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து சிறுமியிடம் தாய் விசாரித்து போது, தாய்மாமா காா்த்திகேய பாண்டியன் சிறுமிக்கு தொ டா்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது தெரியவந்தது. இது குறித்து சிறுமியின் தாய் அளித்தப் புகாரின் பேரில் விருதுநகா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் காா்த்திகேய பாண்டியனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

காா்த்திகேய பாண்டியனுக்கு திருமணமாகி ஒரு மகன் கல்லூரியிலும், மற்றொரு மகன் பள்ளியிலும் படித்து வருகின்றனா். மேலும் அப்பகுதியில் உள்ள மயானத்தில் காவலராக பணிபுரிந்து வந்த இவா், வேறொரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்ததில் அவருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com