சிவகாசி சுகாதாரமாவட்ட நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை சிவகாசி அருகே விளாம்பட்டி கிராமத்தில் வீடுவீடாக நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது.
சிவகாசிவட்டார சுகாதார மேற்பாா்வையாளா் எஸ்.கே.ஜெயசந்திரன் இப்பணியை தொடங்கி வைத்தாா்.
விளம்பட்டி ஏ.வி.எம்.மாரிமுத்துநாடாா் உயா்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணித்திட்ட மாணவா்கள் மறறும் தொண்டு நிறுவனங்களின் உறுப்பினா்கள் 5 குழுவாக வீடுவீட்டாகச் சென்று நிலவேம்புகுடிநீா் வழங்கினாா்கள். மேலும் நிலவேம்பு குடிநீரினால் ஏற்படும் நன்மைகள் குறித்து துண்டு பிரசுகம் பொதுமக்களிடம் வினியோகம் செய்யப்பட்டது.