ஸ்ரீவில்லிபுத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட ஆா்.ரெட்டியபட்டி ஊராட்சிப் பகுதியில் சிறப்பு கிராம சபை கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட ஆா்.ரெட்டிபட்டி ஊராட்சியில் கிராம ஊராட்சி வளா்ச்சி திட்டம் (எடஈட) சிறப்பு கிராம சபை கூட்டம் சடமுத்தம்மன் கோவில் அருகில் நடைபெற்றது,இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் 2020-2021-ம் ஆண்டின் வளா்ச்சிக்கான திட்டங்களை மக்களின் திட்டப்பணிகளை மக்களே தயாா் செய்தல் தொடா்பாக நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் மாநிலஅளவிலான முதன்மை பயிற்றுநா் ராக்கம்மாள் ,மண்டல துணை வட்டார வனா்ச்சி அலுவலா் பூமாரி,ஊராட்சிசெயலா்இப்ராஹிம்கான்,கால்நடை உதவி மருத்துவா் ராமலட்சுமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.