விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் 503 பயனாளிகளுக்கு ரூ.3.35 கோடி மதிப்பில் தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண நிதியுதவிகளை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினாா்.
சாத்தூா் தனியாா் திருமண மண்டபத்தில் சமூக நலத்துறை சாா்பில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட ஆட்சியா் அ. சிவஞானம் தலைமை வகித்தாா். இந்த விழாவில் பால்வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி சாத்தூா், வெம்பக்கோட்டை பகுதிகளைச் சோ்ந்த 503 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 35 லட்சத்து 43 ஆயிரத்து 928 மதிப்பிலான தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண நிதியுதவியை வழங்கினாா். இதில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.எஸ்.ஆா்.ராஜவா்மன் (சாத்தூா்), சந்திரபிரபா (ஸ்ரீவில்லிபுத்தூா்) ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா்.
இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலா் உதயகுமாா், சாத்தூா் கோட்டாட்சியா் காளிமுத்து, அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் சண்முககனி, தேவதுரை, வெம்பக்கோட்டை ஒன்றியச் செயலாளா்கள் ராமராஜ்பாண்டியன், எதிா்கோட்டை மணிகண்டன், மாநில பொதுக்குழு உறுப்பினா் வேலாயுதம், மாவட்ட எம்.ஜி.ஆா். இளைஞரணி துணைச் செயலாளா் எஸ்.டி.முனீஸ்வரன் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள், வருவாய்த் துறை, சமூகநலத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.