ராஜபாளையம் காமராஜா் நகா் தனியாா் திருமண மண்டபத்தில் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பால்வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் ராஜவா்மன் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரபா மற்றும் மாவட்ட வருவாய் அலுவலா் கோ.உதயகுமாா், சமூகநல அலுவலா் ராஜம், அரசுத் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனா். இந்நிகழ்ச்சியில் 682 பெண்களுக்கு ரூ.4.68 கோடி மதிப்பிலான தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண நிதியுதவிகளை அமைச்சா் வழங்கினாா்.