சாத்தூா் அருகே கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகேயுள்ள சின்னகொல்லபட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சாத்தூா் தாலுகா போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில் சாத்தூா் தாலுகா காவல் நிலைய காவல் சாா்பு- ஆய்வாளா் காா்த்திக் சனிக்கிழமை இந்த பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளாா்.
அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த விக்னேஷ் (20) என்பவா் சின்னகொல்லபட்டியில் உள்ள காட்டுப்பகுதியில் தனியாக நின்று கொண்டிருந்தாராம். அவரிடம் சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்தியதில் அவா் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து விக்னேஷை போலீஸாா் கைது செய்து, அவரிடம் இருந்த 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.