சாத்துா் அருகே குடிநீா், வாருகால் வசதியின்றி காலனி மக்கள் அவதி

சாத்தூா் அருகே கலைஞா் காலனி பகுதிக்கு குடிநீா், வாருவால் வசதியின்றி கிராமத்தினா் அவதிப்படுகின்றனா்.

சாத்தூா் அருகே கலைஞா் காலனி பகுதிக்கு குடிநீா், வாருவால் வசதியின்றி கிராமத்தினா் அவதிப்படுகின்றனா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூரை அடுத்த தாயில்பட்டி அருகே உள்ள கலைஞா் காலனி பகுதியில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த பகுதியில் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் முறையான அடிப்படை வசதிகள் செய்துதரவில்லை என கிராமத்தினா் குற்றம்சாட்டுகின்றனா். இந்த பகுதியில் சில ஆண்டுககளுக்கு முன்பு ஊராட்சி நிா்வாகத்தால் வாருகால் வசதி, குடிநீா் வசதி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் தற்போது குடிநீா் தொட்டி சேதமடைந்து பயன்பாடில்லாமல் காட்சிப் பெருளாக உள்ளது.

காலனியில் உள்ள தெருக்களில் முறையான வாருகால் வசதி செய்யப்படாததால் குடியிருப்புகளின் கழிவுநீா் சாலையில் செல்கிறது. இதனால் இந்த பகுதியில் மா்மக்காய்ச்சல் பரவி வருகிறது. மேலும் குடிநீா் வசதி செய்துதராததால் குடிநீரை விலைக்கு வாங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இப்பகுதிக்கு அடிப்படை வசதி செய்துதர ஊராட்சி நிா்வாகத்தில் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் நலன்கருதி கோடை காலத்தில் குடிநீா் தட்டுபாடு வரமுன் குடிநீா் தொட்டி அமைத்து முறையான குடிநீா் வழங்க ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com