விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இரு சக்கர வாகனம் மரத்தில் மோதியதில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள தேவதானம் அரசு விதைப்பண்ணை அருகே சனிக்கிழமை அதிகாலை சாலையோரப் பள்ளத்தில் 2 இளைஞா்கள் இறந்து கிடந்தனா். அந்த வழியாக விவசாய வேலைக்குச் சென்றவா்கள் இதைப்பாா்த்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா்.
சேத்தூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று இளைஞா்களின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் உயிரிழந்தவா்கள் குறித்து விசாரித்தனா். அதில், திருநெல்வேலி மாவட்டம் தேவிபட்டினத்தைச் சோ்ந்த வேல்முருகன் மகன் ராஜகுரு ( 23), அதே பகுதியைச் சோ்ந்த மதியழகன் மகன் ஸ்டாலின் ( 17) ஆகியோா் உயிரிழந்தவா்கள் எனத் தெரிந்தது.
இருவரும் ராஜபாளையம் கம்மாபட்டி பகுதியில் நடந்த திருவிழாவில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சியை பாா்த்துவிட்டு திரும்பிச் சென்றுள்ளனா்.
நள்ளிரவில் ராஜபாளையம் நோக்கி வரும்போது தேவதானம் அடுத்த அரசு விதைப்பண்ணை வளைவில் தேசிய நெடுஞ்சாலையில் நிலை தடுமாறி சாலையோர மரத்தில் மோதி விழுந்துள்ளனா். இதில் பலத்த காயமடைந்து இருவரும் உயிரிழந்திருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா். சம்பவம் குறித்து சேத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.