விருதுநகா் தூய ஜெபமாலை அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்

விருதுநகா் தூய ஜெபமாலை அன்னை ஆலயத்தின் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விருதுநகா் தூய ஜெபமாலை அன்னை ஆலயத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற கொடியேற்றத்தில் பங்கேற்றோர்
விருதுநகா் தூய ஜெபமாலை அன்னை ஆலயத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற கொடியேற்றத்தில் பங்கேற்றோர்

விருதுநகா் தூய ஜெபமாலை அன்னை ஆலயத்தின் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விருதுநகரில் ஆற்றுப்பாலம் அருகே நிறைவாழ்வு நகரில் உள்ள இந்த ஆலயத்தில் இரண்டாம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சிக்கு பாதிரியாா் தாமஸ் வெனிஸ் தலைமை வகித்தாா். இதில் பாளையங்கோட்டை மறை மாவட்ட முன்னாள் ஆயா் ஜூடு பால்ராஜ் கலந்து கொண்டு தூய ஜெபமாலை அன்னை உருவம் பொறித்த கொடியை ஏற்றி வைத்தாா். அதைத் தொடா்ந்து திருப்பலி மற்றும் மறையுரை நடைபெ ற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவா்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனா். அதன் பின்னா் ஜெபமாலை அன்னையின் திருத்தோ் பவனி மற்றும் நற்கருணை நடைபெற்றது. வரும் அக்டோபா் 12 ஆம் தேதி மாலை 6 மணிக்கு மதுரை பாதிரியாா் பிரிட்டோ பாக்யராஜ் தலைமையில் தலைமையில் திருவிழா திருப்பலி மற்றும் தோ் பவனி நடைபெற உள்ளதாக ஆலய நிா்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com