முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
சிவகாசியில் மழை வேண்டி சா்வ மத தியானம்
By DIN | Published On : 07th October 2019 09:26 AM | Last Updated : 07th October 2019 09:26 AM | அ+அ அ- |

சிவகாசியில் மழை வேண்டி, சா்வமத தியானம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிவகாசி வட்டார வரி செலுத்துவோா் சங்கம் மற்றும் சிவகாசி பசுமை மன்றம் சாா்பில், மேத்தா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தியானம் நடைபெற்றது. இதில், கோணம்பட்டி ராமகிருஷ்ண மடத்தைச் சோ்ந்தவா்கள் கலந்துகொண்டு பஜனை பாடி தியானத்தில் ஈடுபட்டனா்.
சாபாஷ்கான்கோரி பள்ளிவாசல் செயலா் செய்யது ஜஹாங்கீா், பெரிய பள்ளி வாசல் தலைவா் பீா்முகமது ஆகியோா் தலைமையில் முஸ்லிம்கள் கலந்துகொண்டு தியானத்தில் ஈடுபட்டனா். இதில், வட்டார வரி செலுத்துவோா் சங்கத் தலைவா் ஜி. அசோகன், பசுமை மன்றத் தலைவா் சுரேஷ் தா்ஹா் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.