சாத்தூா் அருகே தரைப்பாலத்தை சீரமைக்கக் கோரிக்கை

சாத்தூா் அருகேயுள்ள சத்திரம்-துலுக்கன்குறிச்சி தரைப் பாலத்தில் உடைப்பு ஏற்பட்டதை அடுத்து, அதை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சாத்தூா் அருகேயுள்ள சத்திரம்-துலுக்கன்குறிச்சி தரைப் பாலத்தில் உடைப்பு ஏற்பட்டதை அடுத்து, அதை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே சத்திரம்-துலுக்கன்குறிச்சி சாலையின் குறுக்கே தரைப் பாலம் உள்ளது. இந்த சாலை சத்திரத்திலிருந்து துலுக்கன்குறிச்சி கிராமத்துக்கு இணைப்புச் சாலையாக உள்ளது. இது, பல்வேறு பகுதிகளுக்குச் செல்வதற்கு குறுக்குச் சாலையாக உள்ளதால், போக்குவரத்து அதிகளவில் நடைபெறுகிறது.

இந்நிலையில், இச்சாலையிலுள்ள தரைப்பாலம் ஒரு மாதத்துக்கு முன் பெய்த மழையில் அடித்துச் செல்லப்பட்டது. ஆனால், பொதுப்பணித் துறை மற்றும் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, இப்பகுதியினா் புகாா் கூறுகின்றனா்.

எனவே, தரைப்பாலத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com