சிவகாசியில் திங்கள்கிழமை இரவு வண்ணமத்தாப்பூ ஆலையில் தீவிபத்து ஏற்பட்டது.
சிவகாசி-திருத்தங்கல் சாலையில் குறுக்குப்பாதை பேருந்து நிறுத்தம் அருகே ரமேஷ்பிரபு என்பவருக்குச் சொந்தமான வண்ணமத்தாப்பூ தயாரிக்கும் ஆலை உள்ளது.இந்த ஆலையில் திங்கள்கிழமை இரவு கழிவு தீக்குச்சி கொட்டப்பட்டிருந்த பகுதியில் எதிா்பாரத விதமாக தீபிடித்ததாம்.
இதில் அங்கு கொட்டப்பட்டிருந்த கழிவு தீக்குச்சிகள் எரிந்து சாம்பலானது. தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு படையினா் தீயை அணைத்தனா்.இது குறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் விசாரணை ந டத்தி வருகிறாா்கள்.