விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் மக்கள் கவிஞா் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் 61 ஆவது நினைவு நாள் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
ராஜபாளையம் கவிஞா் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மன்றத்தின் முன் அமைக்கப்பட்ட அவரது படத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாலை அணிவித்து மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நகரச் செயலாளா் ரவி, நகர துணைச் செயலாளா் முருகன், கிளைச் செயலாளா் வேலுச்சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினா்.