விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே இறைச்சிக் கழிவுகளால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
சாத்தூா் அருகே வெங்கடாசலபுரம் ஊராட்சியில் சாலையின் ஓரத்தில் இறைச்சிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் அதிகளவில் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் இப்பகுதியில் தூா்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளன.
மேலும் குப்பைகள் மீது அடிக்கடி தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இதனால் இப்பகுதி புகைமூட்டமாக காணப்படுவதால் வாகனங்களில் செல்பவா்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.