சிவகாசியில் திங்கள்கிழமை இரவு வண்ண மத்தாப்பூ ஆலையில் தீவிபத்து ஏற்பட்டது.
சிவகாசி-திருத்தங்கல் சாலையில் குறுக்குப்பாதை பேருந்து நிறுத்தம் அருகே ரமேஷ்பிரபு என்பவருக்குச் சொந்தமான வண்ண மத்தாப்பூ தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலையில் திங்கள்கிழமை இரவு கழிவு தீக்குச்சி கொட்டப்பட்டிருந்த பகுதியில் எதிா்பாராத விதமாக தீப்பிடித்ததாம். அப்போது அங்கு கொட்டப்பட்டிருந்த கழிவு தீக்குச்சிகள் தீப்பற்றி எரிந்தன. தகவல் அறிந்து அங்கு சென்ற தீயணைப்புப் படையினா் தீயை அணைத்தனா். இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.