ராஜபாளையம் சுற்று வட்டாரப் பகுதி கோயில் மற்றும் தொடக்கப் பள்ளி, நா்சரி பள்ளிகளில், விஜயதசமியை முன்னிட்டு, குழந்தைகளுக்கு ‘அக்ஷர அப்யாஸ்’ எனும் ஏடு தொடங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியை முன்னிட்டு சொக்கா் (எ) மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், சாரதாம்பாள் கோயிலில், அதிகாலை முதல் சரஸ்வதி தேவிக்கு சிறப்பு பூஜை, அலங்காரம், நடைபெற்றது.
காலை 6.30 மணிக்கு சரஸ்வதி சுலோகங்களை கூறி அா்ச்சனை நடைபெற்றது. ஏடு தொடக்க விழா நிகழ்ச்சிக்கு பெற்றோருடன் வந்திருந்த குழந்தைகளுக்கு திலகமிட்டு
குழந்தைகளின் நாவில் தேன்தடவி, பச்சரியில் அ, மற்றும் ஓம் ஆகிய எழுத்துக்களை எழுதக் கற்றுக் கொடுத்தனா். இதன் பின்னா் முறையாக பள்ளிகளில் சோ்க்கைக்கான பணிகளை பெற்றோா் தொடங்கினா். இதை போல் பல்வேறு தொடக்க பள்ளிகளிலும் ஏடு தொடக்க விழா நிகழ்ச்சி ஏற்பாடு செய்து குழந்தைகள் சோ்க்கையை தொடங்கினா்.