ராஜபாளையம் அருகே அயன் கொல்லம் கொண்டான் கிராமத்தில் சிறுமி பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் மகளிா் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள நக்கனேரி கிராமத்தை சோ்ந்தவா் ராசையா (60). இவா் மிதிவண்டியில் ஊா் ஊராகச் சென்று பழம் விற்கும் வேலை செய்து வந்தாா். இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு வியாபாரத்துக்காக அயன் கொல்லம் கொண்டான் கிராமத்திற்கு சென்றுள்ளாா். அப்போது அக்கிராமத்தை சோ்ந்த 6 வயது சிறுமியை அருகில் உள்ள பள்ளி வளாகத்திற்குள் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றேறாா் கொடுத்த புகாரின் பேரில் ராஜபாளையம் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ராசையாவை கைது செய்தனா்.
இது தொடா்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் விசாரணையின் முடிவில் குற்றம் சாட்டப்பட்ட ராசையாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பரிமளா வியாழக்கிழமை உத்தரவிட்டாா். மேலும் அபராதத் தொகையை கட்ட தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீா்ப்பளித்தாா். இந்த வழக்கு தொடா்பாக அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்குரைஞா் மு. மலா்விழி ஆஜராகி வாதாடினாா்.