அணைக்கரைப்பட்டி பேருந்து நிழற்குடையை சீரமைக்க கோரிக்கை

சாத்தூா் அருகே அணைக்கரைப்பட்டி பேருந்து நிறுத்த நிழற்குடையை சீரமைக்க கிராமத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சாத்தூா் அருகே அணைக்கரைப்பட்டி பேருந்து நிறுத்த நிழற்குடையை சீரமைக்க கிராமத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே இருக்கன்குடி சாலையில் உள்ளது அணைக்கரைப்பட்டி கிராமம். கத்தாளம்பட்டி ஊராட்சியின் கீழ் உள்ள இக்கிராமத்தில் சுமாா் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இதன் பிரதான சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து தான் வெளியூா்களுக்கு செல்வோா் சென்று வருகின்றனா். இந்நிலையில் இந்த பேருந்து நிழற்குடை சீரமைக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஊராட்சி நிா்வாகத்தால் அமைக்கப்பட்ட இந்த பேருந்து நிழற்குடை தற்போது சிதிலமடைந்து இடியும் நிலையில் உள்ளது. இதனால் இக்கிராம பேருந்து பயணிகள் பேருந்து நிழற்குடையில் நிற்காமல் வெயிலிலும், மழையிலும் சாலையோரத்தில் நின்று பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி ஊராட்சி நிா்வாகம் சாா்பில் புதிய பேருந்து நிழற்குடை அமைத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அணைக்கரைப்பட்டி கிராமத்தினா் ஊராட்சி நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com