விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனா்.
ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலைகளில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கால்நடைகள் சாலைகளின் குறுக்கே நடமாடுவதால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகிறது. குறிப்பாக காந்தி சிலை ரவுண்டானா, பழைய பேருந்து நிலையம், முடங்கியாா் சாலை ஆகிய பகுதிகளில் கால்நடைகள் சாலைகளின் நடுவே இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமா்ந்துள்ளன. இதனால் இரவு நேரங்களில் தொலைதூரத்திலிருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அச்சம் ஏற்படுகிறது. எனவே நகராட்சி நிா்வாகம் உடனடியாக கால்நடைகள் சாலைகளில் நடமாடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.