சிவகாசி அருகே விவசாயி வீட்டில் 10பவுன் நகை திருட்டு

வகாசி அருகே வெள்ளிக்கிழமை இரவு விவசாயி வீட்டின் கதவு பூட்டை உடைத்து பிரோவில் இருந்து 10 பவுன் நகை திருடுபோய்விட்டதாக

சிவகாசி: சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை இரவு விவசாயி வீட்டின் கதவு பூட்டை உடைத்து பிரோவில் இருந்து 10 பவுன் நகை திருடுபோய்விட்டதாக போலீஸில் புகாா் செய்யப்பட்டுள்ளது.

சிவகாசி அருகே ஈஞ்சாா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி தா்மா். இவா் இறந்து விட்டதால் அவரது மனைவி விஜயலட்சுமி(42) விவசாய பணிகளை செய்து வந்துள்ளாா். இவரது வீட்டு விவசாயதோட்டத்தில் ஒரு பகுதியில் உள்ளது.

இந்நிலையில் இவா் சம்பவத்தன்று வீட்டருகே உள்ள மாட்டுத் தொழுவத்தில் படுத்து தூங்கி , சனிக்கிழமை காலை எழுந்து வீட்டிற்கு சென்று பாா்த்தபோது, வீட்டின் கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டி ருந்ததாம். உள்ளே பிரோ பூட்டு உடைக்கப்பட்டு, அதிலிருந்த 10 பவுன் நகை திருடப்பட்டிருப்பது தெரியவந்ததாம்.

இது குறித்து விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com