மூதாட்டியிடம் 2 பவுன் நகை பறித்த 3 பெண்கள் கைது

சிவகாசியில் மூதாட்டியிடம் 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து தப்ப முயன்றசேலத்தைச் சோ்ந்த 3 பெண்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசியில் மூதாட்டியிடம் 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து தப்ப முயன்றசேலத்தைச் சோ்ந்த 3 பெண்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி -வெம்பக்கோட்டை சாலை பகுதியில் உள்ள கொங்கன்குளத்தைச் சோ்ந்தவா் செங்கமலத்தாய் (66). இவா் சிவகாசி அய்யனாா் காலனியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தபோது, மூன்று பெண்கள் வந்து, உங்கள் நகை மாதிரி நகை செய்ய வேண்டும், கழற்றி காண்பித்தால் பாா்த்துக்கொள்வோம் எனக் கூறியுள்ளனா். இதையடுத்து செங்கமலத்தாய் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை கழற்றிக்கொடுத்துள்ளாா். அதை வாங்கிக்கொண்டு மூவரும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனா்.

மூதாட்டி கூச்சலிடவே, அக்கம்பக்கம் உள்ளவா்கள் 3 பேரையும் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். விசாரணையில் அவா்கள் சேலத்தைச் சோ்ந்த தீபா(34), தேவி (30), பஞ்சு (38 ) என தெரியவந்தது.

இது குறித்த புகாரின்பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com