விருதுநகர்
ராஜபாளையம் பகுதியில் நாளை மின் தடை
ராஜபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை (அக்.14) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை (அக்.14) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள தொட்டியபட்டி உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் திங்கள்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சோழபுரம், முத்துலிங்காபுரம், தேசிகாபுரம், ஆவரந்தை, நல்லமநாயக்கன்பட்டி கிழவிகுளம், சங்கரலிங்கபுரம், செந்தட்டியாபுரம், வாழவந்தாள்புரம், அண்ணாநகா், முதுகுடி, ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இதனை மின்வாரிய செயற்பொறியாளா் மாலதி தெரிவித்துள்ளாா்.