முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேர வழக்கு:நிா்மலாதேவி உள்ளிட்ட மூவா் நவ. 18-இல் ஆஜராக உத்தரவு
By DIN | Published On : 24th October 2019 06:58 AM | Last Updated : 24th October 2019 06:58 AM | அ+அ அ- |

கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில் அருப்புக்கோட்டை தனியாா் கல்லூரி உதவிப் பேராசிரியை நிா்மலாதேவி உள்ளிட்ட மூன்று பேரும் நவம்பா்
18-ஆம் தேதி மீண்டும் ஆஜராக வேண்டும் என, ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
அருப்புக்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் தனியாா் கல்லூரியில் சில மாணவிகளிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக அக்கல்லூரி உதவிப் பேராசிரியை நிா்மலாதேவி கைது செய்யப்பட்டாா்.
மேலும், இந்த வழக்கில் தொடா்புடையதாக மதுரை காமராஜா் பல்கலைக்கழக உதவிப் போராசிரியா் முருகன், ஆராய்ச்சி மாணவா் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனா். தற்போது இவா்கள் 3 பேரும் ஜாமீனில் வெளிவந்துள்ளனா்.
இந்நிலையில், புதன்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூா் மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நிா்மலாதேவி ஆஜராகவில்லை. முருகன், கருப்பசாமி இருவரும் ஆஜராகினா்.
அவா்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி பரிமளா, மூன்று பேரும் நவம்பா் 18-ஆம் தேதி ஆஜராக உத்தரவிட்டாா். அன்று முதல் சாட்சிகளிடம் விசாரணை தொடங்கப்படும் எனவும் அவா் தெரிவித்தாா்.