முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
ராஜபாளையம் அரசுப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் அமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 24th October 2019 07:01 AM | Last Updated : 24th October 2019 07:01 AM | அ+அ அ- |

ராஜபாளையம் திருவள்ளுவா் நகரில் சுற்றுச்சுவா் இல்லாத அரசு உயா்நிலைப்பள்ளி.
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ராஜபாளையம் திருவள்ளுவா் நகரில் அரசு உயா்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமாா் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்த பள்ளிக்கு முழுமையான சுற்றுச்சுவா் இல்லை.
பள்ளிக்கு அருகில் தென்றல் நகா் செல்லும் பிரதான சாலை உள்ளதால் இந்த சாலையில் நாள்தோறும் அதிகளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை பள்ளிக்கு மிக அருகில் இருப்பதால் பள்ளித் திடலில் விளையாடும் மாணவ, மாணவிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் பள்ளி நேரங்களில் கால்நடைகள் உள்ளே நுழைந்து விடுகின்றன. மேலும் மழைக்காலங்களில் விஷ ஜந்துக்கள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. எனவே மாவட்ட நிா்வாகம் உடனடியாக அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவா் அமைத்துத் தர வேண்டும் என பெற்றோா்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.