அருப்புக்கோட்டை கல்லூரியில் 2000 பனை விதைகள் நடவு நிகழ்ச்சி

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கலை மற்றும்
அருப்புக்கோட்டையில் உள்ள மதுரை காமராஜா் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற பனை விதைகள் நடவு நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள்.
அருப்புக்கோட்டையில் உள்ள மதுரை காமராஜா் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற பனை விதைகள் நடவு நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள்.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாா்பில் 2000 பனை விதைகள் நடவு செய்யும் நிழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ஆா்.அன்பழகன் தலைமை வகித்தாா். மதுரை காமராஜா் பல்கலைக்கழக பொறியாளா் ஆனந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, பனை மர விதையை நடவு செய்து நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தாா். அப்போது கல்லூரிக் கட்டடத்தைச் சுற்றிலும், அருகிலுள்ள சிறிய நீா்நிலைகளின் கரைகள், சாலையோரங்களில் கல்லூரி மாணவ, மாணவியா் பனைவிதைகளை நடவு செய்தனா். இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியா் மாயழகு, கணிதத்துறை பேராசிரியா் பரிமளம் ஆகியோா் கலந்து கொண்டனா். கல்லூரியின் உடற்கல்வி இயக்குநா் கே.பூபதிராஜன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com