விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை நகரில் சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
அருப்புக்கோட்டை நகரில் 27 ஆவது வாா்டுக்குள்பட்ட திருநகரம் பகுதி மாரியம்மன் கோயில் தெற்குத் தெருவில் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட தாா் சாலை, தற்போது கற்கள் பெய்ா்ந்து குண்டும் குழியுமாக மிகவும் சேதமடைந்துள்ளது. மழைக் காலங்களில் சாலைப் பள்ளத்தில் தண்ணீா் தேங்குவதால், இரு சக்கர வாகனங்களில் செல்வோா் விபத்தில் சிக்குகின்றனா். இதனால், பள்ளி மாணவா்களும் சிரமப்படுகின்றனா்.
எனவே, இச்சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.