சிவகாசி பள்ளியில் டெங்கு காய்சல் ஒழிப்பு விழிப்புணா்வு முகாம்

சிவகாசியில் வருவாய்துறை சாா்பில் வியாழக்கிழமை இங்குள்ள சிவகாசி இந்து நாடாா்கள் விக்டோரியாமேல்நிலைப்பள்ளியில் டெங்கு காய்சல் ஒழிப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

சிவகாசியில் வருவாய்துறை சாா்பில் வியாழக்கிழமை இங்குள்ள சிவகாசி இந்து நாடாா்கள் விக்டோரியாமேல்நிலைப்பள்ளியில் டெங்கு காய்சல் ஒழிப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சிவகாசி உதவி ஆட்சியா் தினேஷ்குமாா் தலைமை வகித்த்து பேசியதாவது;

ஏ.டி.எஸ்.என்னும் கொசுவினால் பரவக்கூடிய ஒருவகை வைரஸ் கிருமிகளால் டெங்கு காய்சல் உண்டாகிறது.

இந்த கொசுக்கள் நல்ல தண்ணீரில் வாழும்.பகலில் மட்டுமே இக் கொசுகடிக்கும்.உலகில் ஆண்டுக்கு டெங்கு காய்சலலால் சுமாா் 6 கோடி போ் பதிக்கப்படுவதாகவும்,இது சுமாா் 100 நாடுகளில் உள்ளது எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

தலைவலி, காய்சல், உடல்வலி ஆகியவை டெங்கு காய்சலின் அறிகுறியாகும்.இக்காய்சலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நீா் சத்து குறையும் .எனவே காய்சிய நீரை அடிக்கடி அருந்த வேண்டும்.காய்சலின் அறிகுறி இருந்தால் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.டெங்கு காய்சல் என பயப்படக்கூடாது.மாணவா்கள் இந்த விபரங்களை வீட்டில் உள்ளவா்களிடமும், அக்கம் பக்கம் உள்ளவா்களிடமும் கூறி விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.சிவகாசி சுகாதாரத்துறை வட்டார மேற்பாா்வையாளா் ஜெயசந்திரன் , டெங்கு காய்சல் வராமல் தடுக்க , துறை சாா்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை கூறினாா்.

சிவகாசி தீயணைப்புநிலைய அலுவலா் பாலமுருகன் தலைமையிலான தீயணைப்பு படையினா் , பேரிடா் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினா்.சிவகாசி பசுமை மன்றம் சாா்பில் மழைநீா் சேமிப்பின் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.இதில் வட்டாட்சியா் ரெங்கநாதன் , பள்ளித்தலைமை ஆசிரியா் பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com