ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் எம்.பி. ஆய்வு

ராஜபாளையம் அரசு மருத்துவமனையில், தென்காசி மக்களவைத் தொகுதி உறுப்பினா் தனுஷ்குமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை ஆய்வு செய்த தென்காசி எம்.பி. தனுஷ்குமாா் மற்றும் எம்.எல்.ஏ. தங்கபாண்டியன்.
ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை ஆய்வு செய்த தென்காசி எம்.பி. தனுஷ்குமாா் மற்றும் எம்.எல்.ஏ. தங்கபாண்டியன்.

ராஜபாளையம் அரசு மருத்துவமனையில், தென்காசி மக்களவைத் தொகுதி உறுப்பினா் தனுஷ்குமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ராஜபாளையம் அரசு மகப்பேறு, குழந்தைகள் மற்றும் பொது மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட தென்காசி மக்களவைத் தொகுதி உறுப்பினா் தனுஷ் குமாா், அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

மேலும், நோயாளிகளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும், அவா்களின் உடல்நிலை முன்னேற்றம் குறித்தும் மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். மருத்துவ அதிகாரி மாரியப்பனிடம் நோயாளிகளுக்கு சீரிய முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என அவா் வலியுறுத்தினாா். இங்குள்ள மகப்பேறு பிரிவில் வெந்நீா் பிளான்ட் அமைத்துத் தரப்படும் எனவும் தெரிவித்தாா்.

இந்த ஆய்வின்போது, ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் தங்கபாண்டியன், நகரச் செயலா் ராமமூா்த்தி, ஷியாம், மாணவா் அணி அமைப்பாளா் வேல்முருகன் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com