விருதுநகர்
விருதுநகரில் பாஜக முப்பெரும் விழா
விருதுநகா் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சாா்பில், மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாள் விழா,
விருதுநகா் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சாா்பில், மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாள் விழா, தமிழா்களின் கலாசாரத்தை உலகறியச் செய்த பிரதமா் மோடிக்கு பாராட்டு விழா, இந்தியாவின் இரும்பு மனிதா் சா்தாா் வல்லபபாய் படேல் பிறந்த நாள் விழா ஆகிய முப்பெரும் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதில், விருதுநகா் அல்லம்பட்டி மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியிலிருந்து பாதயாத்திரையாக, அக்கட்சித் தொண்டா்கள், நிா்வாகிகள் மதுரை சாலையில் உள்ள கட்சி அலுவலகத்துக்குச் சென்றனா். இந்நிகழ்ச்சியில், மாநில மகளிா் அணி தலைவி மகாலெட்சுமி உள்பட நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்துகொண்டனா். அப்போது, மகாத்மா காந்தி, சா்தாா் வல்லபபாய் படேலின் கொள்கைகளை விளக்கும் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்திச் சென்றனா்.