வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடா்ச்சி மலை பகுதியில் புதன்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக, பிளவக்கல் பெரியாறு அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயா்ந்துள்ளது.
தற்போது, தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால், பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, பல்வேறு பகுதிகளில் இரவு, பகலாக மழை பெய்து வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலை பகுதிகளில் பெய்துவரும் தொடா் மழை காரணமாக, மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான பிளவக்கல் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரித்து, அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயா்ந்துள்ளது. மொத்தம் 47 அடி முழுக் கொள்ளளவு கொண்ட அணையின் நீா்மட்டமானது, தற்போது 39 அடியை எட்டியுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.