சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு: பால் வியாபாரிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

ராஜபாளையம் பகுதியில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில், பால் வியாபாரிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 13 ஆயிரம் அபராதம் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்ப

ராஜபாளையம் பகுதியில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில், பால் வியாபாரிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 13 ஆயிரம் அபராதம் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பு அளித்தது. 
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், என். புதூர் லதா நகரை சேர்ந்தவர் முத்துராஜ் (48). பால் வியாபாரியான இவர், கடந்த 2017 ஆம் ஆண்டில், அப்பகுதியை சேர்ந்த இரண்டு சிறுமிகளை மிட்டாய் வாங்கி தருவதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து அக்குழந்தைகள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். 
இதையடுத்து குழந்தைகளின் பெற்றோர் அளித்தப் புகாரின் பேரில் ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீ-ர், முத்து ராஜை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையின் அடிப்படையில்  முத்துராஜுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 13 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பரிமளா தீர்ப்பளித்தார். இதையடுத்து, முத்துராஜை கைது செய்த போலீ-ர், மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com