சாத்தூர் பகுதியில் இடியுடன் மழை பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

சாத்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் சனிக்கிழமை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


சாத்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் சனிக்கிழமை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
  விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் கடந்த சில நாள்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக மேகமூட்டம் காணப்பட்டது. ஆனால் மழை பெய்யவில்லை. இந்நிலையில் சனிக்கிழமை மதியத்திற்கு மேல் மேகமூட்டம் ஏற்பட்ட நிலையில் மழை பெய்யத் தொடங்கியது. சாத்தூர், படந்தால் அணைக்கரைப் பட்டி, இருக்கன்குடி, மேட்டமலை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது.  இதனால் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com