விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.கலைக் கல்லூரியின் மாணவர்கள் அறிவுரை மையம் சார்பில் ஆரோக்கிய வாழ்விற்கான சரிவிகித உணவு முறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அக்கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்குக் கல்லூரிச் செயலாளர் பா.சங்கரசேகரன் தலைமை வகித்தார். முதல்வர் ந.முத்துச்செல்வன் முன்னிலை வகித்தார்.
இதில் கலந்து கொண்ட மதுரை ஹெர்பல் லைப் ஊட்டச்சத்து நிறுவனத்தின் நிபுணர் ராஜூ செந்தில், ஊட்டச்சத்துமிக்க உணவுகள், நேரம் தவறாமல் உணவு உண்பதன் அவசியம் ஆகியவை குறித்தும், நோய்கள் வருவதற்கான காரணங்கள் மற்றும் உணவையே மருந்தாகக் கொள்ளுதல் போன்ற பல்வேறு கருத்துகளையும் விளக்கிப் பேசினார்.
மாணவர்கள் அறிவுரை மைய ஒருங்கிணைப்பாளர் அ.கமலேஸ்வரி வரவேற்றார். வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் அ.நித்யா நன்றி கூறினார். ஏற்பாடுகளை மாணவர்கள், அறிவுரை மைய உறுப்பினர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.