சிவகாசியில் உதவும் கரங்கள் அமைப்பு தொடக்கம்

சிவகாசியில் காவல் துறை சார்பில் உதவும் கரங்கள் அமைப்பு திங்கள்கிழமை மாலை தொடங்கப்பட்டது.

சிவகாசியில் காவல் துறை சார்பில் உதவும் கரங்கள் அமைப்பு திங்கள்கிழமை மாலை தொடங்கப்பட்டது.
  சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் உள்ள நகர் காவல் நிலைய அலுவலகம்  முன்பு இந்த உதவும் கரங்கள் அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதில் தங்களுக்கு வேண்டாத பொருள்களை வைத்துவிட்டால், அந்தப் பொருள்களை வேண்டியவர்கள் வந்து எடுத்துக் கொள்ளலாம். இதனை பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார். இதில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மு. ராஜராஜன், சிவகாசி டி.எஸ்.பி.பிரபாகரன், காவல் ஆய்வாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com