விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலில் தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
மதுரை-தூத்துத்துடி நான்குவழிச் சாலையில் அருப்புக்கோட்டை காந்தி நகரில் உள்ளது சீரடி சாய்பாபா கோயில். இக்கோயில் அறறங்காவலராக பிரபல அருப்புக்கோட்டை தொழிலதிபா் டி.ஆா்.வரதராஜன் உள்ளாா். இவரது துணைவியாா் ஷெண்பகவல்லியும், தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜனும் நெருக்கமான தோழிகள் எனக் கூறறப்படுகிறது.
இந்நிலையில் திருச்செந்தூா் கோயிலில் சுவாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு தமிழிசை செளந்தரராஜன் ஞாயிற்றுக்கிழமை மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றாா்.
மதுரை செல்லும் வழியில் அருப்புக்கோட்டையில் உள்ள இக் கோயிலில் தனது தோழியானஷெண்பகவல்லியுடன் வந்து தமிழிசை செளந்தரராஜன் வழிபாடு நடத்தினாா். அவருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் சிறறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.