அருப்புக்கோட்டை பள்ளியில் கல்வி மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிகள்

 விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கல்வி மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிகள் செயின்ட் ஜோசப் மெட்ரிக்குலேசன் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றன.

 விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கல்வி மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிகள் செயின்ட் ஜோசப் மெட்ரிக்குலேசன் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றன.
 அருப்புக்கோட்டை சதுரங்க விளையாட்டுச் சங்கம் (செஸ் அசோஸியேசன்) சார்பில், மறைந்த ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் டி.ஜான்சன் சுந்தர்சிங் நினைவாக  இப்போட்டி நடைபெற்றது. சங்கத் தலைவர் க.சித்ரவேல்,செயலாளர் பா.ராமர், பொருளாளர் ரெ.சுகுமார்ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாவட்டப் பொறுப்பாளர் சுந்தர்ராஜன் தலைமை வகித்து நடுவராகச் செயல்பட்டார். இப்போட்டியில், அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்திற்குள்பட்ட பல்வேறு பள்ளிகளிலுமிருந்து மொத்தம் 187 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். 
 இதில் 8,10,12 மற்றும் 15 வயதிற்குள்பட்டோருக்கென தனித்தனியே போட்டிகள் நடைபெற்றன. இதன்படி ஒவ்வொரு வயதுப்பிரிவிலும் வென்ற, முதலாவது, 2 ஆவது, 3 ஆவது இடம்பிடித்த மாணவ, மாணவியருக்கு பரிசுக்கோப்பை மற்றும் சான்றிதழை சங்கத் தலைவர், செயலாளர் ஆகியோர் வழங்கி, மாணவர்களைப் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர். சங்க துணைத் தலைவர் க.கலுசலிங்கம், துணைச்செயலாளர் ச.செந்தில்குமார்,ஜே.சாமுவேல் ஜான்வெஸ்லி, ஏ.சாகுல்ஹமீதுஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com