சாத்தூர், ஏழாயிரம்பண்ணை பகுதியில் நாய்கள் தொல்லை

விருதுநகர் மாவட்டம் சாத்தூர், ஏழாயிரம்பண்ணையில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் அவற்றை கட்டுப்படுத்த ஊராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகம் 


விருதுநகர் மாவட்டம் சாத்தூர், ஏழாயிரம்பண்ணையில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் அவற்றை கட்டுப்படுத்த ஊராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகம் 
நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏழாயிரம்பண்ணை  ஊராட்சியில் சுமார் 5ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில் பழைய ஏழாயிரம்பண்ணை, ஏழாயிரம்பண்ணை பகுதியில் உள்ள வடக்கு தெரு, தெற்கு தெரு, ராஜீவ்நகர், அரண்மனை தெரு பிரதான சாலை, மேலும் பல்வேறு பகுதியில் அதிகளவில் தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. 
இதனால் தெருக்களில் பொதுமக்கள் நடக்கவும், சிறுவர்கள் விளையாடவும் அச்சப்படுகின்றனர். இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர்களை தெரு நாய்கள் துரத்துவதால் விபத்துகள் நடைபெறுகின்றன. தெரு நாய்கள் கடித்து ஏராளமானோர் காயமடைந்து உள்ளனர். இரவு நேரங்களில் ரோந்து பணியில் செல்லும் காவல்துறையினரையும் தெரு நாய்கள் விட்டு வைக்கவில்லை. இதனால் முழுமையாக இரவு நேரங்களில் ரோந்து செல்ல முடியவில்லை என்று காவல்துறையினரும் குற்றம்சாட்டுகின்றனர். 
இந்த தெருநாய்களை கட்டுப்படுத்த பொதுமக்கள் சார்பில் பலமுறை மனு அளித்தும் ஊராட்சி நிர்வாகத்தினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். எனவே பொதுமக்கள் நலன் கருதி தெரு நாய்களை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் சார்பில் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்களும்,சமூக ஆர்வலர்களும் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தூர் பகுதியில்...:  இதே போன்று சாத்தூர் நகராட்சிக்குள்பட்ட அண்ணாநகர், குருலிங்காபுரம், படந்தால், மாரியம்மன்கோயில், முருகன்கோயில், பிள்ளையார்கோயில் தெரு, மேலகாந்திநகர், வெள்ளகரை சாலை, பிரதானசாலை, ரயில்வே பீடர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் நாய்கள் சுற்றி திரிகின்றன. இதனால் இந்த பகுதியில் சிறுவர்கள்,பெரியவர்கள் நடமாட முடியவில்லை. 
மேலும் பிரதான சாலையில் அதிகளவில் நாய்கள் சுற்றித் திரிகின்றன. அவை ஏரளமானோரை கடித்து காயப்படுத்தியுள்ளன. இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. 
எனவே பொதுமக்கள் நலன் கருதி நகராட்சி நிர்வாகம் சார்பில் நாய்களை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் இப்பகுதியினர் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com