பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஸ்ரீசெளடாம்பிகா பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையின் தேசிய அளவிலான  கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.


விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஸ்ரீசெளடாம்பிகா பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையின் தேசிய அளவிலான  கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் அருள்மொழி தலைமை வகித்தார். மின்னணுவியல் மற்றும் தொடர்பியல்துறைத் தலைவர் இளையராஜா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட, மதுரை கே.எல்.என். பொறியியல் கல்லூரியின் தகவல்தொழில்நுட்பத்துறைத் தலைவர் அழகேஸ்வரன் பேசுகையில், தற்போது ஐ.ஓ.டி. மற்றும் வயர்லெஸ் சென்சார்துறையில் பொறியியல் துறை மாணவர்களுக்கு ஏராளமான, ஆராய்ச்சி தொடர்பான வாய்ப்புகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.  
இந்நிகழ்ச்சியில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளிலிருந்து மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். நிகழ்சிக்கான 
ஏற்பாடுகளைக்  கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர் ஆனந்தி செய்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com