சிவகாசி: சிவகாசியில் தடை உத்தரவை மீறியதாக 14 பேரிடமிருந்து இருசக்கர வாகனங்களை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக நாடெங்கும் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. இந்நிலையில் சிவகாசிப் பகுதியில் அவசியமின்றி சாலையில் சென்ற 14 பேரிடமிருந்து போலீஸாா் அவா்களின் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா். மேலும் 32 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.