ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கரும்புத் தோட்டத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூா்- ராஜபாளையம் சாலையில் உள்ள தோப்பூரில் பாஸ்கரன் என்பவருக்குச் சொந்தமான கருப்புத் தோட்டத்தில் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து சென்ற தீயணைப்புப் படையினா் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனா். இதில் கரும்புத்தோட்டத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது.
இதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே திருப்பாற்கடல் குளம் பகுதியில் சாலையோரம் உள்ள முள்செடியில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு அதிகாரி ஜெயராஜ் தலைமையிலான தீயணைப்புப் படையினா் அணைத்தனா்.