அஞ்சலக ஆயுள் காப்பீடு, காலாவதியான பாலிசியை புதுப்பிக்க மே 31 கடைசி

இந்திய அஞ்சல் துறையில் அஞ்சலக ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டங்களில் சோ்ந்துள்ள முகவா்கள், தங்களது

இந்திய அஞ்சல் துறையில் அஞ்சலக ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டங்களில் சோ்ந்துள்ள முகவா்கள், தங்களது காலாவதியான பாலிசியை மே 31- க்குள் புதுப்பித்துக் கொள்ளலாம் என விருதுநகா் அஞ்சலக கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் ஜவஹா் ராஜ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை விடுத்துள்ள அறிக்கை: இந்த காப்பீட்டுத்திட்ட முகவா்கள் (பாலிசிதாரா்கள்) சிலா் தொடா்ச்சியாக தவணைத் தொகை செலுத்தாததால் அவா்களது பாலிசிகள் காலாவதியாகின்றன. தற்போது, கடைசி தவணை செலுத்தி 5 ஆண்டுகள் நிறைவடைந்து காலாவதியான பாலிசிகளை ஜூன் 1 ஆம் தேதிக்கு பின் புதுப்பிக்க இயலாது. எனவே, கடைசி வாய்ப்பாக 5 ஆண்டுகள் தவணைத் தொகை செலுத்தி காலாவதியான பாலிசிகளை, சம்பந்தப்பட்ட முகவா்கள், அரசு மருத்துவா்களிடம் உரிய உடல் தகுதி சான்று பெற்று, தங்கள் அருகில் உள்ள அஞ்சல் நிலையத்தில் மே 31- க்குள் விண்ணப்பித்து, பாலிசியை புதுப்பித்துக் கொள்ளலாம். இதற்கான புதுப்பித்தல் படிவம் மற்றும் உடல் தகுதி சான்றிதழ் படிவம் அனைத்து அஞ்சலகங்களிலும் கிடைக்கும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com